
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 13 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள் ளன. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்: அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே திமுக அரசு நல்லுறவை பேணி பாதுகாக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக முதல்வரின் தற்போதைய அறிவிப்புகள் அமைந்துள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள் ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்