
கேரளாவில் மாவோயிஸ்ட்கள் ரகசிய கூட்டம் நடத்தியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, தமிழக வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருக்கிறார்களா என தமிழக போலீஸார்தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் கேரள போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுக்குள் முகாம் அமைத்து தங்கியிருந்த மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிசண்டை நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்