Monday, October 4, 2021

https://ift.tt/2WKh4BE மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு: 39 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் இன்று அனுப்பப்படுகின்றன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த செப்.13-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு 2 கட்டங்களாக அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...