Monday, October 11, 2021

https://ift.tt/3Dym4Ja ஆண்டுகளாக சீரான வர்த்தகம் இல்லாத நிலையில் தொடர் மழையால் பம்ப்செட் ஆர்டர்கள் அதிகரிக்கும்: கோவை சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் நம்பிக்கை

கடந்த இரு ஆண்டுகளாக சீரானவர்த்தகம் இல்லாத நிலையில், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளதால், ஆர்டர்களை எதிர்பார்த்து சிறு, குறு மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கோவையில் மோட்டார் பம்ப்செட், அவற்றுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி சார்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் நேரடி ஆர்டர் பெறும் சிறு, குறு நிறுவனங்கள் என்ற அடிப்படையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், இத்துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் உள்ளனர். கோவையில் அரை ஹெச்.பி. முதல் 500 ஹெச்.பி. வரையிலான பம்ப்செட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. கரோனா பரவலின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, உற்பத்தி நிறுத்தம், மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் மோட்டார் பம்ப்செட் உற்பத்தி சார்ந்த சிறு, குறு நிறுவனங்கள் ஆர்டர்கள் இல்லாமல் தவித்து வந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...