
செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு தாராளமாக பரிசுகள் வழங்கப்பட்டன. தேர்தல் பறக்கும் படையினர், தங்களின் சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கோரியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று புனித தோமையர் மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்தூர் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், சித்தாமூர் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக அக். 9-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்