
தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளின் கரைகள், நீர்நிலைகள் போன்ற பல்வேறு பகுதிகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள சூழலில், பேரிடர் காலங்களிலும், அரசுக்கு நிலம் தேவைப்படும் நிலையிலும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதைத்தவிர்க்கும் வகையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது, அங்கு குடியிருப்போருக்கு உரிய மாற்று இடம், வீடு தரப்பட வேண்டியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இதுபோன்றஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தும் திட்டங்களை வருவாய்த் துறை 2 பிரிவுகளாகச் செயல்படுத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்