
சென்னை சைதாப்பேட்டை பாலம் அருகே, தொழிற்சாலைகளின் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அடையாற்றில் விடப்படுகிறது. அதன் காரணமாக ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரின் தரம் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக நாளிதழ் ஒன்றில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது.
அதனடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. பின்னர் இது தொடர்பாக ஆய்வு செய்ய, சென்னை மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை மற்றும் சென்னை ஆறுகள் அறக்கட்டளை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஆகியோரை கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்