
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிப்போரை மறு குடியமர்த்துவதற்கான வரைவுக் கொள்கையில், மறுவாழ்வு, கல்வி, வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்துள்ளதால், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளின் கரைகள், நீர்நிலைகள் போன்ற பல்வேறு பகுதிகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள சூழலில், பேரிடர் காலங்களிலும், அரசுக்கு நிலம் தேவைப்படும் நிலையிலும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதைத்தவிர்க்கும் வகையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது, அங்கு குடியிருப்போருக்கு உரிய மாற்று இடம், வீடு தரப்பட வேண்டியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்