
கரூரில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணியும், கடவுள்கள், எமன் வேடமணிந்து, வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (அக். 10) 5-வது கரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கரூர் நகராட்சி அலுவலகம் முன் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி இன்று (அக். 08) நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்