
நாட்டில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ஒடிசா மாநிலத்தில் உள்ள தலபிரா நிலக்கரி சுரங்கத்தில் ஆண்டுக்கு 2 கோடி டன் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக, என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சரிவடைந்து வந்த நாட்டின் பொருளாதார நிலைமை, தற்போது படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், அதற்கேற்றாற்போல் மின்சக்தியின் தேவையும் அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்