
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேமுதிக எழுச்சியோடு செயல்படுகிறது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம். மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தோல்வியுற்றோம். எங்களின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. கட்சி தொடங்கியதன் லட்சியத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்