
பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடையை மறுபரிசீலனை செய்து, தமிழக பட்டாசுகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலமுதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா பெருந்தொற்றால் நாட்டில் உள்ள குறு சிறு,நடுத்தரத் தொழில்கள் துறைகடுமையாக பலவீனமடைந் துள்ளன. இந்த தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை நம்பியே தமிழகத்தின் பொருளாதாரம் உள்ளது. தமிழகத்தில் குறு சிறு, நடுத்தரத்தொழில் துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் எனது தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்