
புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளை வரும் நவம்பர் 8-ம் தேதி முதல் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுவையில் கரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. பொதுத்தேர்வு உட்பட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொற்று குறைந்ததால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்