
திருவான்மியூர் ரங்கநாதபுரத்தில் பக்கிங்காம் கால்வாயில் பொதுப்பணித் துறை அனுமதி இல்லாமல் டிஎன்டிஆர்சி நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவான்மியூர் ரங்கநாதபுரம், 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மி்கவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிந்ததால் இப்பகுதி குடியிருப்புகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. அதனால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்