
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகலில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தீபாவளியன்று கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்