
நிவாரணப் பணிகளை முதலில் கவனிக்கவேண்டும். வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து விவாதம் செய்யக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தி.நகர், அண்ணா நகர் பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் காசிமேடு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்தப் பிரச்சினையில் அரசு தனிகவனம் செலுத்தி, மீனவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கவேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்