
சிவகங்கை அருகே கிராமப் பகுதியில் அதிகாரிகள் உறுதி யளித்தபடி தொடக்கப் பள்ளியைத் தொடங்கவில்லை. இந்நிலையில் வெளியூர் பள்ளிக்குச் சென்று வருவதற்கான வேன் கட்டணமும் உயர்த்தப்பட்டதால், 20 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் நிறுத்தி வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கவுரிப் பட்டியில் அருகருகே உள்ள திரு வேலங்குடி, காரம்பட்டி கிராமங்களில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 50 குழந்தைகள் இருந்தும் பள்ளி இல்லை. அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப்பள்ளி தொடங்கலாம். ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்