
கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில், பிற துறையினருடன் இணைந்து பணியாற்றி சென்னை காவல்துறை முத்திரை பதித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அடங்கிய 13 சென்னை பெருநகர காவல் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 7 நாட்களாக சுழற்சி முறையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்