
கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வடசென்னையில் அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஜவஹர் நகர், வெற்றி நகர், அஞ்சுகம் நகர், திருப்பதி நகர் பெரியார் நகர் 70 அடிச்சாலை பெரவள்ளூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்