
கோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தொடர்புடைய பள்ளியின் முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாநகரில் வசிக்கும் ஒரு தம்பதியர், அப்பகுதியில் சாலையோர தள்ளுவண்டிக் கடையில் பலகாரம் விற்று வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். தடாகம் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் பிளஸ் 1 வரை படித்த அவர், நடப்புக் கல்வியாண்டில் அப்பள்ளியில் இருந்து விலகி, வீட்டருகே உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்