
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என உள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யகோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, உள்இடஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, செல்லாது என கூறி சட்டத்தை ரத்துசெய்து நவ.1-ல் தீர்ப்பளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்