
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், நெரும்பூர் கிராமத்தில் இருந்து இரும்புலிச்சேரி, எடையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வகையில் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்திருந்தது. இது கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டது.
இதனால், மேற்கண்ட கிராமமக்கள் தீவுபோல் தனித்து விடப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் போக்குவரத்துக்காக தற்காலிகமாக பாலாற்றில் படகுகளை இயக்கியது. பின்னர், ஆற்றின் குறுக்கே சிமென்ட் குழாய்கள் புதைக்கப்பட்டு தற்காலிமாக மண்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையும் அடுத்த மழை வெள்ளத்திலேயே சேதமடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்