
சென்னை அருகே ஆவடியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (24). சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதயம், நுரையீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 11-ம் தேதி இரவு 8.15மணிக்கு பணி முடிந்ததும், வீட்டுக்கு செல்வதற்காக மருத்துவமனையின் மினி பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிச் செல்ல, புவனேஸ்வரனுடன் 3 மருத்துவமனை பணியாளர்கள் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்