
நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் 9-ம் தேதிபேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “கீழமை நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசின் பதில் என்ன? கீழமை நீதிமன்ற வளாகங்களில், பெண்களுக்கு தனி ஒதுங்கிடங்கள் எந்த அளவுக்கு உள்ளன? நீதிமன்றங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த, அரசு மேற்கொண்ட முயற்சிகள், இதற்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு?” என்று கேள்வி எழுப்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்