
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஹால்மார்க் மோசடி குறித்து நுகர்வோர் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) தெரிவித்துள்ளது.
தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்க நகைகள், கலைப்பொருட்களின் தூய்மை, நேர்த்தித் தன்மை ஆகியவை இந்திய தர நிர்ணய அமைவனத்தால் (பிஐஎஸ்) அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களால் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப்படுகின்றன. அதன் பிறகே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்