
சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குமிடம் 717 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநகர வெள்ளத்தை தடுக்க மழைநீர் வடிகால் அமைப்பது தீர்வாகாது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் குறைந்த மழைக்கேவெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. மழைநீர் வடிந்த பிறகு, மழைநீர் வடிகால் அமைப்பதே தீர்வு என்று கருதி பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு வடிகால்களை மாநகராட்சி அமைத்து வருகிறது. கடந்த 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சென்னையில் 306 இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. அதன் பின்னர் ஏராளமான மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு, தற்போது 2,070 கி.மீ. நீளத்துக்கு 9,224 வடிகால்கள் பராமரிக்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்