
சென்னை: இந்து குழுமத்தின் தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி மையத்தின் முன்னாள் மாணவியான இவர், இதழியல் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக 2022-ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையம் மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் இவ்விருதுவழங்கப்படுகிறது. இந்த மையத்தில் பயின்று, இதழியல் துறையில் சிறப்பாக செயல்படுவோரைக் கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்