
கொள்ளிடம் அருகே குளத்தில் உள்ள முதலையை பிடிக்க காவல் நிலையத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டநபரை பெண் காவலர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசியசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த சோதியக்குடி கிராமத்தில் உள்ள பாப்பாகுளத்தில் கடந்த 2 நாட்களாக முதலை ஒன்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், கொள்ளிடம் காவல் நிலையத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, முதலையை பிடிக்க உதவுமாறு கேட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்