
சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் வார்டுக்கு ஒரு மேஜை அமைத்து, வேட்புமனுக்களை சரிபார்க்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில், நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்