
திருச்சி: திருச்சி அருகே நெடுங்கூரில் நேற்று ஒரே இடத்தில் 24 குரங்குகள் உயிரிழந்து கிடந்த விவகாரம் தொடர்பாக, தனிப்படை அமைத்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள நெடுங்கூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் 18 ஆண் குரங்குகள், 6 பெண் குரங்குகள் என 24 குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் கிரண், வனச் சரகர் வி.கோபிநாத் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து 24 குரங்குகளின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்