
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். இதில், சென்னை மாநகராட்சி 2-வது வார்டுக்கு நித்யஸ்ரீ, 5-வது வார்டுக்கு முகமது பாஷா, 8-வது வார்டுக்கு உஷாராணி உட்பட 38 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஆவடி மாநகராட்சி 2-வது வார்டுக்கு சதீஷ், 30-வது வார்டுக்கு விக்டர் ஜான்சன் உள்ளிட்ட 4 வேட்பாளர்களும், தாம்பரம் மாநகராட்சி 5-வது வார்டுக்கு ஆண்டியப்பன், 7-வது வார்டுக்கு தாமோதரன், 8-வது வார்டுக்கு சந்திரன், 10-வது வார்டுக்கு ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட 9 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்