
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புராதன மயில் சிலை மாயமான விவகாரம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழு தங்களது விசாரணையை 6 வார காலத்துக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பிறகு அங்குள்ள புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த புராதன மிக்க மயில் சிலை மாயமாகி வேறு ஒரு மயில் சிலை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்