
சென்னை: ராக்கெட் அறிவியல் பயிற்சியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ராக்கெட் அறிவியல் தொழில்நுட்ப தொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.
தமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் தொடக்க நிகழ்வு, ஆன்லைனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார், ஐஏஎஸ் தலைமையேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்