
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை கொட்டித் தீர்த்தது. தமிழகம், புதுச்சேரியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவகாலத்தில் வழக்கமாக 45 செ.மீ.மழை கிடைக்கும். ஆனால், தற்போது 71 செ.மீ. மழை கிடைத்தது. இது வழக்கத்தைவிட 59 சதவீதம் அதிகம். சென்னையில் அதே காலகட்டத்தில் 78 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், தற்போது 136 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 74 சதவீதம் அதிகம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று விடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்