
சென்னை: பத்திரப் பதிவின்போது ஆள்மாறாட்டம் மூலம் முறைகேடு பதிவுகள் நடப்பதை தடுக்க, ஆதார் வழி அங்கீகாரம் பெறும் நடைமுறை முதல்கட்டமாக திருநெல்வேலி, சேலத்தில் அனைத்து பதிவு அலுவலகங்களிலும் அமல்படுத்தப் படுகிறது.
தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பதிவுத் துறையில் ‘ஸ்டார் 2.0’ என்ற மென்பொருள் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பத்திரப் பதிவுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் வரிசைக்கிரமமாக பதிவுகள் செய்து, அன்றே பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்