Sunday, February 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/21/large/769668.jpgதிருவண்ணாமலையில் பெண்கள் மீது தாக்குதல்; திமுக முன்னாள் நகராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக துணை தலைவர் நரேந்திரன் வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர் உள்ளிட்ட பெண்களை தாக்கிய திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் ஸ்ரீதரன் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை நகராட்சி 13-வது வார்டுக்கான வாக்குப்பதிவு, நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று முன் தினம் நடைபெற்றது. அப்போது அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட பெண் வேட்பாளர்களை மோசமான சொற்களால் திமுகவினர் திட்டி உள்ளனர். அச்சமயத்தில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட வரு வாய் அலுவலர் பிரியதர்ஷினி காலில் விழுந்து அதிமுக வேட்பாளர் சில்பி சகானா கதறி அழுதுள்ளார். இதற்கிடையில் காவல்துறையினர் முன்னிலையில் பாஜக வேட்பாளர் செண்பகவள்ளி, மாவட்ட பாஜக செயலாளர் சதிஷ்குமார் உள்ளிட்டவர்களை முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் தலைமையிலான திமுக வினர் ஆபாசமாக திட்டி தாக்கி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...