
சென்னை: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் நெறிமுறைகளை பின்பற்றி சென்னையில் புறநகர் மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்பட்டது. அதுபோல, பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 2 தவணை தடுப்பூசி கட்டாயம் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
இதற்கிடையே, கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்றுமுதல் முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்