
சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்ஃப் வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கி மோசடி செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட வக்ஃப் வாரியஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வக்ஃப் வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள எங்களது வக்ஃப்வாரிய பாதுகாப்பு குழு மூலமாகவக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதரீதியிலான இறைபணிகளுக்காகவும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஏழை, எளியமக்களுக்கு உதவும் நோக்கிலும் வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் கொடையாக பெறப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்