
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு மாநகராட்சி, 8 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ம் தேதி நடந்துமுடிந்த நிலையில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் ஈ.வெ.ரா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும், குடியாத்தம் நகராட்சிக்கு ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பேரணாம்பட்டு நகராட்சிக்கு மரீத் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலை கல்லூரியிலும், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் பேரூராட்சிகளுக்கு பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான்வென்டிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சிகளுக்கு பள்ளிகொண்டா ஆர்.சி.எம் பள்ளி வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்