
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை என்று கோயில் தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் சிற்றம்பல மேடைக்கு பக்தர்கள் செல்வது கோயில் நிர்வாகத்தால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 3 தினங்களுக்கு முன்பு, ஜெயசீலா என்றபெண், சிற்றம்பல மேடையில் ஏற முயன்றார். அப்போது தீட்சிதர்கள் அவரை தடுத்து வெளியே தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக சிதம்பரம் காவல்நிலையத் தில் அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்