
தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்த ரயில்நிலையமாக திகழ்கிறது. கேரளா, திருவனந்த புரம், கர்நாடகம், பெங்களூரு, மங்களூரு, மும்பை போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக ஜோலார்பேட்டை ரயில் நிலையம் விளங்கி வருகிறது.
கடந்த 1971-ம் ஆண்டு ஜோலார் பேட்டை நகராட்சி தோற்றுவிக்கப் பட்டது. அதன் பிறகு, 2004-ம் ஆண்டு 3-ம் நிலை நகராட்சியாகவும், 2010-ம் ஆண்டு முதல் இன்று வரை 18 வார்டுகளுடன் 2-ம் நிலை நகராட்சியாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்