
ஆர். புதுப்பட்டினம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், முஸ்லிம் மக்கள் சீர்வரிசை வழங்கியது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்தது.
ஆர்.புதுப்பட்டினம் வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா பிப்.17-ல் கணபதி ஹோமம், யாக சாலைபூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றன. நேற்று 6-ம் காலயாகசாலை பூஜைக்குப் பின்பு மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி மற்றும் சித்தி விநாயகர், மகாலட்சுமி, இடும்பன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்