
வேலூர் மாநகராட்சி 11-வது வார்டு அதிமுக வேட்பாளர் திமுகவினரால் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அப்படி ஒரு கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என காவல் துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 58 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடை பெறவுள்ளது. இதில், அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரை கடந்த இரண்டு நாட் களாக மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்