
சென்னை: கரோனா பாதிப்பு குறைந்ததால், மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 31.86 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்கள் அதிக அளவில் பயணம் செய்யத் தொடங்கிஉள்ளனர். எனவே, தேவைக்கு ஏற்றாற்போல மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்