
சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், அதிமுக ஆட்சியில் இருந்த மடிக்கணினி, ஆடு, மாடு வழங்குவது உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா காணப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசினார். அதற்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்