
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெற்று வருகிறது. இக்கோயில் குண்டம் இறங்கும் நிகழ்வில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பண்ணாரி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு, பண்ணாரியம்மன் திருவீதி உலா செல்வதும் ரத்து செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்