
கல்வி கற்பித்தலில் தொழில் நுட்பத்தை சிறப்பாக பயன்படுத் தியதற்காக ஐசிடி தேசிய விருதை புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியை ரேவதி பெற்றுள்ளார்.
மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல், கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐசிடி விருது மத்தியக் கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்