
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 7 முதல் நேரடி விசாரணையில் மட்டுமே வழக்குகள் விசாரிக் கப்படும் என்றும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் கடந்த 2020 மார்ச் இறுதி வாரத்தில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, வழக்குகள் காணொலி விசார ணையாக நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்