
கோவை அவிநாசி சாலையில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள அவிநாசி சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்தில், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதை அமைக்கப்படுகிறது. தலா நான்கு இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம், 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமைக்கப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்