
சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. இதன்தொடர்ச்சியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மத்திய தொகுப்பில் இருந்து நேற்று 22 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி சென்னை வந்தது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்